என்மேலுள்ள நின் சர்வ - En melulla nin sarva

என்மேலுள்ள நின் சர்வ

நன்மைகட்காக நான்

என்ன செய்வேன் உமக்கென்

இயேசுபரா? இப்போ

நன்றியால் எந்தன் உள்ளம்

பொங்கி வழியுதே

இன்று வரையுமென்னைக்

காத்ததாலே - தேவா

பாவத்தினின்று எந்தன்

ஆவி உயிர்ப்பிக்க

சாபசிட்சை சகித்த

தேவ சுதா - மகா

என்னை அனுதினம்

அன்போடு நடத்திடும்

பொன்னேசுவே ஆனந்த

ஸ்தோத்திரமே - எந்தன்

முற்றும் முடிய என்னைக்

காத்து நடத்திடச்

சத்துவமீந்திடும் நல்

நண்பர் நீரே - திருச்

தாதன் வலப்புறத்தில்

நாதன் நீர் ஏழைக்காய்

பாதம் வேண்டியே நிற்கும்

பாக்கியனே - பொன்னின்

குற்றம் குறைகளின்றிக்

கோதில்லா ஜோதியில்

முற்றும் என்னை நிறுத்த

வல்லவனே - தேவா

இந்நிலம் தன்னிலேழைத்

தங்கிடும் நாளெல்லாம்

ஏத்துவேனே உம் திரு

நாமமதை - ஏழை